அன்பு தம்பி , தங்காய் கேட்டுக்கொள் ! வாழ்வின் சூத்திரம் அறிந்துகொள் ! அன்பினை கூட்டியே வாழ்வினை சுவைத்திடு ! ஆணவம் கழித்து அறிவை வளர்த்திடு ! இன்சொல் பெருக்கி உறவைக் காத்திடு ! ஈகை , பரிவு , பாசம் வகுத்து மனிதம் போற்றிடு ! நான் எனது என்ற குறுகிய வட்டத்தை விடுத்திடு ! நாம் நமது என்ற நேர்கோட்டில் பயணித்திடு ! இதுவே வாழ்வின் வெற்றிக்கணக்கு ! இனி இல்லை தோல்வி உனக்கு !