Skip to main content

Posts

Showing posts from May, 2020

அரிது அரிது மானிடப் பிறப்பு (against drinking)

அரிது அரிது மானிடப் பிறப்பு அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது! அரிதாய் உயிரை மதுக்கடைகளில் இன்று, அடமானம் வைக்கிறான் ஆறறிவு மனிதன்! மது மற்றும் போதைக்கு அடிமை ஆகி, மதியிழந்து மாண்பிழந்து மானமிழந்து, வெட்கிப் போவதும் எதனாலோ?   மதுவெனும் அரக்கன் ஆட்கொண்டதால், உறைவிடம் மறந்து உடுக்கை இழந்து, உருண்டு புரளும் இடம் தெருவோரமோ? மானிடராய் பிறத்தல் அரிதென்பதை மறந்து, மாக்களுடன் சமரசம் செய்தீரோ மானுடரே!   மது அடிமையெனும் நோயில் சிக்கி கொண்டு, மனைவி மக்களை வேதனையில் நிறுத்தி, அன்றாடம் கூலியை மதுக்கடையில் கரைத்து, அல்லல் படுத்துவீரோ உம்மவர்களை? கொல்லும் விஷமாம் மது அது உமை, கொஞ்சம் கொஞ்சமாய் அரிக்கிறதே மானிடரே!   அத்தனை வியாதியும் வரிசையாய், அல்லல் படுத்தும் உமை என்றுமே! எமனை தெரிந்தே நீவிர் விரைவில், எனைத் தீண்டும் என அழைப்பீரோ? அறியீரோ உம் உடல் இறைவன் இல்லமென்று!   அரிதாம் மனிதப்பிறவி ஒருமுறையே! ஆழ்ந்து சிந்தித்து முடிவெடும்! மாண்புடை மனிதனாய் வையத்தில் வாழ்ந்திட , மதுவினை மறந்திடுவேனென சபதத்தை, நெஞ்சினி...

BLOCKED TO UNBLOCK

BLOCKED The word blocked means obstructing something in the way. There are many ways people can block us in our personal life and in social media. Same way there are reasons for God to block certain blessings in our life to create us into the best version. We don’t realize that we must learn and correct us. Most of the time our blessings are blocked for us to get prepared mentally, physically and spiritually to be stronger to receive a  greater blessing. When we are put into certain positions and when we are not ready, there is always a delay period in life. That delay is to create us into the best version in our life to develop us. How do we take our blocking season? Becoming emotional and over thinking makes us weak and finally we end  up wasting our time. Instead, why don’t we try to see the things that should be done to correct and improve us. So that we can learn from our mistake. What are the changes that tak...

கொரோனா (corona)

கொரோனா உயிர்க்கொல்லி நோயே உன்னோடு உரையாட வந்தேன்! உலகினிலே உலவுகிறாய் உயிர்குடிக்கும் விஷமாக! கண்ணுக்குப் புலப்படாமல் கலங்கடிக்கும் நீ கரைகடந்து செல்லும் நாள்தான் என்றோ? அரசன் முதல் ஆண்டி வரை உன் அடிமை! பணக்காரன் முதல் பாமரன் வரை உன் விருப்பம்! உன்னாலே புதுப்பிறப்பு அடைகிறது இயற்கை! சுதந்திரம் பெறுகிறது பறவை விலங்கினம்! மனிதனின் வாழ்வோ மாண்டுபோகும் நிலை! மட்டில்லா துயரம் மனமுருகும் சூழல்! தடுப்பூசி இல்லாமல் தள்ளாடும் மருத்துவம்! இயல்புநிலை நீங்காது திண்டாடும் மக்கள் ஊரடங்கை மதிக்கும் மக்கள் கூட, மதிக்காத மமதையரால் பாதிக்கப்படும் அவலம்! தினக்கூலிகள் நிலையோ அந்தோ பரிதாபம்! தற்கொலையில் முடியும் வாழ்க்கைப் படலம்! பிச்சையில் உயிர்வாழும் வீடில்லா வாசிகளை ஊரடங்குச் சட்டம் உயிர்கொடுத்துக் காக்குமோ? கோவில் வாசலில் பசியில் கெஞ்சும் நெஞ்சங்கள், மக்களை எதிர்பார்த்து மடியும் மாதுயர்! புலம் பெயர்ந்த தொழிலாளிகள் உரிமையிழக்கும் நிலை! உணவு விடுதியும் கைவிட உணவின்றி உலவும் நிலை! வீதியோரம் உணவில்லை விருந்தோம்பும் நெஞ்ச...

இனவெறி (racism)

இனவெறி மானிட குலமே நீ மதியிழந்ததேனோ? மனிதமெனும் மாண்பை நீ மறந்ததும் ஏனோ? இனமெனும் நஞ்சினை இவ்வுலகில் விதைத்தாய்! இருளினும் கொடிய இகழ்ச்சியை சமைத்தாய்! காடுமலை நீர்நிலத்தை வகையிட்ட உனக்கு, காரணமென்ன கிடைத்தது இனத்தினை வகையிட! ஆறறிவு கொண்ட நீ ஆற்றலுடன் வாழ்ந்திட, இனமெனும் இடைச்சங்கிலி இகத்தினில் தேவையோ? நிறவழி மொழிவழி மனிதரைப் பிரித்து, பாகுபாடு பார்ப்பதும் பாரினில் ஏனோ? இந்நிறம் ஏற்றமென்றும் இம்மொழி ஏற்றமென்றும் உரைத்திடும் உரிமையை உனக்களித்ததாரோ? இனத்தினால் பாகுபடுத்தி பிரிவினயைப் பார்க்கும் நீ படுகொலை பல நிகழ்த்தி பாசாங்கு செய்வதும் ஏனோ? அறிவியல் வளர்ச்சியின் அருமையை உணர்ந்தாலும், அறியாமை இருள் இந்த இனவெறி உணர்வாய்! மனிதனைப் பிரிவுபடுத்தி மடிந்திட செய்தாலும், செந்நிற குருதி என்றும் ஒன்றே அறிவாய்! இனத்தால் பிளவுபட்டு இழிவுற்று வாழ்ந்தாலும், உணர்வால் ஓரினம் என்றே அறிவாய்! இனத்தினால் படுகொலை இருண்டிடும் மனித மாண்பு, உயிர்களை அழித்திடும் கொடுமைகள் ஏராளம்! ஏன் இந்த விபரீதம் பழிவாங்கும் பரிதாபம்! ஏராளம் ஏராளம் எண...